அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். நாம் பஞ்சசம்ஸ்காரம் ஶரணாகதி பற்றிய உண்மையான அர்த்தமும் மகத்துவமும் தெரியாமல், ஸ்ரீவைகுண்ட ப்ராப்த்தியைப் பற்றிய நம்பிக்கையும், ஞானமும் இல்லாமல், நமது ஆசார்யரிடத்தில் பஞ்சசம்ஸ்காரம் சரணாகதி செய்வதை ஒரு சடங்காகச் செய்து வந்தாலும், ஸ்ரீய:பதியான எம்பெருமான் நமக்கு மோக்ஷம் கொடுப்பாரா? எனது கேள்வியில் ஏதேனும் தவறு இருந்தால் க்ஷமிக்கவும்.

பஞ்சசம்ஸ்காரம் ஶரணாகதி இதைப்பற்றி தெரியாமல் நடந்திருந்தாலும், அதை நாமாக செய்து கொள்ளவில்லை. ஆசார்யனே செய்து வைக்கிறார் என்கின்றபடியினால் , அந்த ஆசார்யனுடைய விஶ்வாஸத்தின் பேரில் நமக்கு அதனுடைய பலன் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனாலும் நாம் அதைப் பற்றி தெரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல் நடந்துக் கொள்ள வேண்டும். ஆசார்யன் நமக்காக பண்ணியிருந்தாலும் கூட, நாம் எம்பெருமானிடம் ஆத்மாவை ஸமர்ப்பித்தவர்கள் என்கின்ற முறையில் நமது நிலைமையை நாம் புரிந்துக்கொண்டு, அதற்கேற்ற ஆசார அனுஷ்டான நியமங்களைக் கடைபிடிப்பதற்காக அவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top