அடியேனின் தாயார் 2 மாதங்களுக்கு முன்பு திருமோகூர், அழகர் கோயில், பெரியாழ்வார் திருவரசு கோயில்களுக்கு சென்று சேவித்து விட்டு திரும்பும் வழியில் ஒரு கார் விபத்தில் பரமபதித்து விட்டார். அடியேனின் சகோதரன் காரியங்கள் செய்து கொண்டு இருக்கிறார்.பெண் என்ற முறையில் அடியேன் பரமபதித்த அவர்களுக்காக என்னென்ன அனுஷ்டானங்கள் கடைப்பிடிக்க வேண்டும், எந்தெந்த ஸ்தோத்திரங்கள் சேவிக்கலாம்?

ஒரு பெண்ணுக்கு, பெரிதாகச் செய்வதற்கு ஒன்றும் கிடையாது. சகோதரனானவர் அவர் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். அக்கார்யத்திற்கு போக முடியுமானால், அவர் உடன் இருந்து அவருக்கு சகாயம் பண்ணலாம். தனிப்பட்ட முறையில் பெண்களுக்கென்று எந்த அனுஷ்டானமும் செய்வதற்கு இல்லை.
வருடாந்திர ஶ்ராத்த திதி வரும் நேரத்தில் அங்கு போய் கலந்துக்கொள்ளலாம். அப்படி முடியாமல் போனால் அந்த திதி தினத்தன்று அவரை நினைத்துக் கொண்டிருக்கலாம்.
எல்லா ஸ்தோத்ரங்களையும் சேவிக்கலாம்.
தகப்பனார் ஒரு விபத்தில் பரமபதித்து விட்டபடியால் மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அந்த கஷ்டம் போவதற்காக தயாஶதகம் முதலான ஸ்தோத்ரங்களைச் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top