அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. உபந்யாஸங்கள் நிறைய கேட்க கேட்க ப்ரபத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அடியேனுடைய க்ருஹத்தில் பெரியவர்கள் இதர தேவதாந்திரர்களை வழிபடுவதுடன், பெருமாள் சந்நிதியில் அவர்களின் படங்களை வைத்தும், அவர்களுக்காக சில பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இருக்கின்ற பக்ஷத்தில் நான் ப்ரபத்தி செய்து கொள்ளலாமா? ப்ரபத்திக்குப் பிறகு அடியேன் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அகத்திலே இருக்கும் பெரியவர்கள் மற்ற தேவதாந்திரங்களைக் கொண்டாடினால் கூட நீங்கள் கொண்டாடாமல் இருக்க முடியும். நாம் ஒன்றும் தேவதாந்திரங்களுக்கு எதிரியில்லை. எம்பெருமானைச் சேவிக்கின்ற படியினால் மற்ற தேவதாந்திரங்களைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
அதனால் நீங்கள் ஶரணாகதி பண்ணிக்கொண்டு ஆசார்யன் சொல்வதுபோல் மற்ற தேவதாந்திரங்களைச் சேவிக்காமல் இருக்க வேண்டும். தேவதாந்திரங்ளுடைய ப்ரசாதங்களைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
தேவதாந்திரங்ளுடைய ப்ரசாதங்களைச் சாப்பிடக்கூடாது என்று அவர்களுடைய ஆகமத்தில் இருக்கின்றது. சைவ ஆகமங்களில் இருக்கின்றது. அவர்கள் இப்போது அதை மாற்றி விட்டார்கள். ரொம்ப விஷயம் தெரிந்த வைதீகரர்கள் சாப்பிட மாட்டார்கள். உண்மையில் நாம் எதுவும் புதியதாகச் சொல்லவில்லை. அவர்களும் நாளடைவில் அதை சரி செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதனால் மனசாட்சியில் எந்த ஒரு குற்ற போதமும் இல்லாமல் பகவானை மட்டும் சேவித்துக்கொண்டு இருக்கலாம்.

2 thoughts on “அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. உபந்யாஸங்கள் நிறைய கேட்க கேட்க ப்ரபத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அடியேனுடைய க்ருஹத்தில் பெரியவர்கள் இதர தேவதாந்திரர்களை வழிபடுவதுடன், பெருமாள் சந்நிதியில் அவர்களின் படங்களை வைத்தும், அவர்களுக்காக சில பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இருக்கின்ற பக்ஷத்தில் நான் ப்ரபத்தி செய்து கொள்ளலாமா? ப்ரபத்திக்குப் பிறகு அடியேன் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.”

  1. நமஸ்காரம் அடியேன், இந்த விஷயத்தில் இன்னும் சில சந்தேகங்கள்

    இப்படி அகத்தில் பெரியவர்கள் சாளிக்கிராமத்துடன், பெருமாள் படங்களுடன் மற்ற தேவதாந்திரங்களின் படமும் வைத்திருந்தால், நாம் ஸவிக்கும் பொழுது, பிற தேவதாந்திரங்களையும் சேர்த்து ஸேவிக்கும் படி ஆகிவிடுகிறது, மிகவும் தர்ம சங்கடமான நிலை, அப்போது தோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

    சில பெருமாள் கோவில்களிலும் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறோம், பிரதட்சணம் செய்யும் பொழுது பிற தேவதாந்திரங்களையும் பிரதட்சணம் பண்ணும் படி ஆகிறது.
    நாம் இருக்கும் இடம் திவ்ய தேசம் இல்லாததால், மனதில் கோவிலுக்கு போய் பெருமாள் சேவிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த தர்ம சங்கடமான நிலை
    என்ன செய்ய வேண்டும் என்று உபதேசிக்க பிரார்த்திக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top