அகத்தில் பெருமாள் ஸந்நிதியில் தேவதாந்திர படங்களை வைத்துக் கொள்ளவே கூடாது. பெருமாள் ஸந்நிதி என்று மட்டும் இல்லை அகத்தில் வேறு எங்கேயும் தேவதாந்திர படங்களை வைத்துக்கொள்ளாமல்தான் இருக்கவேண்டும். அதனால் அநதப் படங்களை பெருமாள் சந்நிதியிலிருந்து முதலில் எடுத்து விடவேண்டும். அப்படி எடுத்து விட்டால் சேவிக்க வேண்டிய நிர்பந்தமே வராது.
வேறு ஊர்களில் கோவில்களில் வேறு சந்நிதிகளோடு சேர்ந்து பெருமாள் சந்நிதி இருக்கின்ற பக்ஷத்தில் வேறு வழியில்லை என்றால் பெருமாளை மட்டும் சேவித்து விட்டு, ப்ரதக்ஷிணம் பண்ணுவதைத் தவிர்க்கலாம்.

