அதன் விளைவுகளால் அவருக்கு கட்டாயம் பாதிப்பு ஏற்படும். ஶரணாகதி செய்து கொண்டவர்களாக, பெருமாளிடம் பக்தி உள்ளவர்களாக, பெருமாளுக்குக் கைங்கரியம் செய்பவர்களாக யாராக இருந்தாலும் சரி அவரவர்கள் செய்த தவற்றிற்குத் தண்டனையைக் கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து யாரும் மீள முடியாது. தெரிந்து தவறு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு. அவருக்கு பாதிப்பும் ஏற்படும்.
அவர் செய்து கொண்ட ஶரணாகதிக்குப் பலன் இருக்குமா என்று கேட்டால் இருக்கும். ஏனென்றால் பாபம் செய்தால் பாபத்திற்கு தண்டனை, நல்ல காரியங்கள் செய்யும் பொழுது அதற்குப் பலன் என்று எப்படி இருக்கின்றதோ, அதேபோல் அவர் மோக்ஷத்திற்காக ஶரணாகதி செய்து கொண்டிருந்தால் அப்பொழுது அவருக்கு மோக்ஷ பலன் கிடைக்கும்.
மோக்ஷ பலன்களுக்குத் தடையாக இந்தப் பாபங்கள் ஆகாது. ஏனென்றால் இந்தப் பாபங்களுடைய பலனை இங்கேயே அனுபவித்து விடுவோம். அதை நன்றாக அனுபவித்த பிறகே மோக்ஷம் கிடைக்கும்.