மாமனார் பரமபதித்த பின் முதல் ஒரு வருடம் மனைவியோ, நாட்டுப் பெண்ணோ எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடலாமா? மாமனாரின் மாஸிகம், மற்றும் ஶ்ராத்தத்தன்று சாயந்திரம் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பது சரியா? முறை உண்டா? கொடுக்கலாமா?

பொதுவாக பரமபதித்தவருடைய பார்யாள் எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடுவது வழக்கமில்லை. நாட்டுப் பெண்ணாக இருக்கிறவர் சுபஸ்வீகாரம் ஆனபிறகு எண்ணெய் தேய்த்து தீர்த்தமடலாம்.
பொதுவாகச் சுமங்கலி ஸ்த்ரீகளை குறித்து ஶ்ராத்தம் பண்ணும் பொழுதுதான் இந்த மாதிரி வெற்றிலைபாக்கு கொடுப்பார்கள் என்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாமனார் பரமபதித்ததற்கு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை.
சிலர் மிகவும் வயதானவர்கள், ரொம்ப பெரியவா பரமபதித்து விட்டால் சுப மரணம் என்று சொல்லுவார்கள். அதாவது திருப்தியாக இருந்து வயதாகி அவர் பரமபதித்தது கூட சுபம் என்கின்ற ரீதியில் இருந்தால் அப்பொழுது இந்த மாதிரி தாம்பூலம் கொடுப்பார்களாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top