ஆசார்யன் திருவடியில் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு கன்யா ஸ்திரீக்கும் மற்றும் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு வைஷ்ணவ ஸ்த்ரீ ஒரு சைவ குடும்பத்தில் வாக்கப்பட்டாலும் அவளுக்கும் மோக்ஷம் கட்டாயம் கிட்டுமா என்பதை விளக்க பிரார்த்திக்கின்றேன்

ஆசார்யன் திருவடியில் ப்ரபத்தி பண்ணி கொண்ட கன்யா ஸ்த்ரீக்கு மோக்ஷம் உண்டா என்றால் உண்டு. ப்ரபத்தி என்பது சின்னக் குழந்தைக்குக்கூட பணணலாம்.
இப்படியாக ஶாஸ்திரம் தனித்தனியாகச் சொல்லாது. இது பண்ணினால்தான் கிடைக்கும் ஶரணாகதி பண்ணிக்கொண்டு என்ன பண்ணினாலும் மோக்ஷம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லாது.
ஶரணாகதி பண்ணிக்கொண்டவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ள வேண்டும். சைவ குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும்கூட, அவர் வைஷ்ணவ தர்மங்களைப் பின்பற்றி இருக்கலாம். அதாவது பரமைகாந்தியம், ஒரு வைஷ்ணவ ஸ்த்ரீயாக இருக்க முடிந்தால் நல்லது. அப்படி இருக்க முடியவில்லை, தேவதாந்திர சம்பந்தங்களை விட முடியவில்லை என்றால், கடைசியில் கூட திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் திருந்தி மாறலாம். அப்படியும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பகவத் சங்கல்பம் என்னவோ அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
இவை அனைத்தையும் காட்டிலும் ஶரணாகதி செய்தவர்கள் மற்ற குடும்பங்களில் வாழ்க்கைப்படாமல் இருப்பதுதான் நல்லது, பாதுகாப்பும் கூட. வாழ்க்கைப்பட்டபின்பு என்ன செய்வது என்ற கேள்வி வருவது சரியாக இல்லை என்றே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top