ஒரு ப்ரபன்னனின் கடைசி மூச்சு வரை தேவதாந்திர சம்பந்தம் இருந்தால் ப்ரபத்தி பலன் தருவது சந்தேகம்தான் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார்.
ஒரு ப்ரபன்னன் கடைசி நேரத்தில் தேவதாந்திர சம்பந்தத்தை விட்டுவிட்டு எம்பெருமானிடம் ஶரணாகதி பண்ணால் சந்தேகமில்லாமல் எம்பெருமான் ஏற்றிக்கொள்வான் என்று ஸ்வாமி நம்மாழ்வார் சொல்லியிருக்கிறார் – “மாளுமோர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே” என்பதாக.
தான் செய்தது தப்பு என்று தெரிந்துவிட்டால், உடனே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துவிடலாம் அதில் தவறில்லை. மறுபடியும் தப்பு செய்தால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணலாம். ஆனால் மறுபடியும் தப்பு பண்ணாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இதில் முக்கியமான ஒன்று. பெரியவர்கள் எல்லாரும் த்வய மந்திரம் வைத்துக்கொண்டு அனைத்திற்கும் சேர்த்து ஒருமுறைதான் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணுவார்கள்.