எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற பயம் இருப்பது நல்லதுதான் அப்படியிருந்தால்தான் தப்புசெய்யாமல் இருக்க முடியும். மேலும் என்ன ஆனாலும் ப்ரபத்தி பண்ணியாகிவிட்டது அதன் பலன் கிடைத்துவிடும் என்ற பயமில்லாமல் இருத்தல்கூடாது. இவ்விஷயத்தில் பயத்தோடுதான் இருத்தல்வேண்டும். தப்பு பண்ணினால் கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்ற பயம்வேண்டும்.
ஆனால் ஶரணாகதி பலன் கொடுக்குமா என்ற பயம்வேண்டாம். அதை “நிர்பரோ நிர்பயோஸ்மி” ஸ்வாமி தேஶிகன் சொல்கிறார்.
நீங்கள் எதற்கு பயப்படவேண்டுமோ அதற்கு பயப்படாமல் எதற்கு வேண்டாமோ அதற்கு பயப்படுகிறீர்கள். ஶரணாகதி பற்றி கவலையேவேண்டாம். ஏனென்றால் ஶரணாகதி பண்ணிவிட்டால் பகவானிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டீர்கள் அதற்குப் பிறகு அது பலன் அளிக்குமா, பலன் அளிகாதா என்று பலர் கேட்கும் கேள்வியே தவறாகும்.
ஶரணாகதி என்றாலே நம்மையும் நம் ரக்ஷணப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டோம். ஒப்படைத்துவிட்டதற்கு அடையாளமே அதைப் பற்றி நாம் கவலையின்றி இருப்பதுதான். மீறி கவலைப்பட்டால் நாம் சரியாக ஒப்படைக்கவில்லை என்றே அர்த்தம்.
ஶரணாகதி பண்ணியவர்கள் அது இப்படியிருந்தால் பலன் கொடுக்குமா போன்ற சந்தேகத்துடன் கூடிய கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஶரணாகதி பண்ணிவிட்டால் நாம் நம்மை ஒப்படைத்து விட்டோம் அதற்கு மேல் பகவான் பார்த்துக்கொள்வான் என்று கவலையில்லாமல் இருத்தல்வேண்டும். நாம் எதை நினைத்து கவலைக்கொள்ளவேண்டும் என்றால், நாம் செய்யும் தவறுகள் பற்றி ஏனெனில் தப்பு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு.
ஆகையால் ஶரணாகதி பண்ணியவர்கள் பலன் கொடுக்காமல் போய்விடுமோ என்று எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், அது என்ன வேண்டுமானாலும் ஆகிவிட்டுப்போட்டும். நாம் மற்றொருவருடையது நினைத்து கவலைப்படமாட்டோம் அல்லவா அதுபோல்தான் இந்த ஆத்மா பகவானுடையது அதைப்பற்றி கவலைப்படாமல், தப்பு பண்ணினால் தண்டனை என்ற பயத்தோடு இருத்தல்வேண்டும்.