அடியேன் நமஸ்காரம். ஆவணி அவிட்டம் குறிப்பிட்ட நாளில் ஏதோ ஒரு அசந்தர்ப்பத்தினால் பண்ண முடியாது போனால் பின்னால் வேறொரு நாளில் பண்ண முடியுமா?

என்ன அசந்தர்பம் என்று தெரியவேண்டும். நம்முடைய காரணத்திற்காக இல்லாமல் அதுவாக நடந்ததானால், தீட்டு வந்துவிட்டாலோ, உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தாலோ ஆவணி அவிட்டம் பண்ணமுடியாமல் போனால் அடுத்த மாதம் பௌர்ணமியில் பண்ணலாம். ஆனால் நாமாக காரணத்தை ஏற்படுத்துக்கொண்டு, உ.தா: நாங்கள் வேறு ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றோ, கல்யாணத்திற்கு போகவேண்டும் என்ற காரணங்களுக்காகத் தள்ளிப்போடுவது நியாயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top