என்ன அசந்தர்பம் என்று தெரியவேண்டும். நம்முடைய காரணத்திற்காக இல்லாமல் அதுவாக நடந்ததானால், தீட்டு வந்துவிட்டாலோ, உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தாலோ ஆவணி அவிட்டம் பண்ணமுடியாமல் போனால் அடுத்த மாதம் பௌர்ணமியில் பண்ணலாம். ஆனால் நாமாக காரணத்தை ஏற்படுத்துக்கொண்டு, உ.தா: நாங்கள் வேறு ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றோ, கல்யாணத்திற்கு போகவேண்டும் என்ற காரணங்களுக்காகத் தள்ளிப்போடுவது நியாயமில்லை.