திவ்ய ப்ரபந்தத்தில் “ராமா” என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? ராமர் என்ற பெயர் தமிழில் எப்படி வரும்?

“கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று நம்மாழ்வார் ஸ்பஷ்டமாக “ராமர்” என்ற திருநாமத்தை கூறி பாடியுள்ளார்.
ராமன் என்ற பெயருக்கு தமிழில் மனத்துக்கு இனிமையானவன் என்று அர்த்தம். ரமயதி -எல்லாருக்கும் இனிமையாக இருக்கக்கூடியவன். இதை தூய தமிழில் மனத்துக்கினியான் என்பர். அதையே ஆண்டாளும் பாடியுள்ளார். மேலும் சில பாசுரங்கள்:
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6- (பெரியாழ்வார் திருமொழி)
சிற்றவை தன் சொல் கொண்ட
          சீராமா தாலேலோ! பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)

சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top