மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் சுமங்கலிப் பெண்கள் சாதாரமான நூல் புடவை 9 கஜம் தான் உடுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது பட்டு ஜரி வைத்த புடவை அல்லது கல்யாணி காட்டன் புடவைகள் உடுத்தலாமா? 6 கஜ புடவையை 9 கஜமாக உடுத்திக் கொள்ளலாமா?

மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் கர்தாவினுடைய பாரியாள் முதல்நாள் சூர்யாஸ்தமனத்திற்குப் பிறகு உலர்த்திய சுத்தமான வஸ்திரத்தைதான் கட்டாயம் தரித்துக்கொள்ளவேண்டும். மேலும் 6 கஜத்தை 9 ஆக உடுத்திக்கொள்ளும் வழக்கமில்லை. 9 கஜத்தைத்தான் உடுத்திக்கொள்ளவேண்டும்.
குறிப்புகள்:
மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் பொதுவாகப் பட்டு உடுத்திக்கொள்ளும் வழக்கம் கிடையாது. ஏனென்றால் சில பட்டுப்புடவைகளில் ஜரிகையெல்லாம் இருக்கும் அது நல்ல ஜரியாக இருக்காது. சாதாரண ஜரிகையாக இருந்தால் அவை உள்பாத்திரங்கள் மேல் படக்கூடாது. நூல் புடவைக்கு இந்தத் தோஷம் கிடையாது. ஆகையால் பொதுவாக நூல் புடவையையே உடுத்திக்கொள்கிறார்கள்.
சில க்ருஹங்களில் மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொள்ளும் வழக்கமுண்டு. அந்தப் புடவையையும் முதல் நாள் சூர்யாஸ்தமனத்திற்குப் பிறகு நனைத்து உலர்த்தி உடுத்திக்கொள்வார்கள்.
ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தைப் பின்பற்றவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top