பசுஞ்சாணத்தில் கிருமி இருந்தால் அது அசுத்தம். மூன்று நாட்களுக்கு மேல் சுத்தம் ஆகாது என்று ஶாஸ்திரம்.
பழைய காலத்து மண்தரைக்கு பூச்சி வராமல் இருக்க சாணி உபயோகப் பட்டது. தரையைச் சுத்தம் செய்ய, சில பாத்திரங்களைச் சுத்தம் செய்ய மட்டுமே இது பயன்படும். வேறு விதத்தில் பயன் படுத்தக்கூடாது. கை, கால் அல்லது பண்டங்கள் சுத்தம் செய்யவோ சாணி கூடாது. அதனால் அதன் மூலம் கிருமி அணுக வாய்ப்பே இல்லை.
மேலும், அகத்தில் தரையைச் சாணியால் சுத்தம் செய்தபின், நல்ல ஜலம் தெளித்து, துணியால் நன்கு துடைக்க வேண்டும். சாணத்தின் நாற்றம் அடையாளம் என எதுவும் இருக்கக் கூடாது. அப்போதுதான் ஶாஸ்த்ரப்படி அது சுத்தமாகும்.