அகத்தில் இருக்கும் புருஷாளுக்கு சைனஸ் தொந்தரவு இருப்பதால் தினமும் தலைக்குத் தீர்த்தமாட முடியவில்லை. அந்த நாட்களில் அவர்கள் பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணலாமா?

தலைக்குத் தீர்த்தமாட முடியாத சமயங்களில் பெருமாளைத் தொடாமல் அமுது செய்வித்தல் முதலான திருவாராதனம் மட்டும் செய்யலாம். மானசீகமாக ஆராதனம் செய்து அர்க்ய பாதியங்களெல்லாம் ஸமர்ப்பிக்கலாம். ஆனால் பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வித்தல் முடியாது. மற்றவைகளை ஓரளவு ஆசாரமாக இருந்து செய்ய முடிந்தால் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top