தலைக்குத் தீர்த்தமாட முடியாத சமயங்களில் பெருமாளைத் தொடாமல் அமுது செய்வித்தல் முதலான திருவாராதனம் மட்டும் செய்யலாம். மானசீகமாக ஆராதனம் செய்து அர்க்ய பாதியங்களெல்லாம் ஸமர்ப்பிக்கலாம். ஆனால் பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வித்தல் முடியாது. மற்றவைகளை ஓரளவு ஆசாரமாக இருந்து செய்ய முடிந்தால் செய்யலாம்.

