கர்ம் விபாகா என்ற ஶாஸ்த்ர க்ரந்தத்தில் நாம் செய்யும் அபசாரங்களுக்கு எந்த மாதிரி ரோகம் வரும் என்ற குறிப்புள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதில் ஒன்று எம்பெருமானும் சிவனும் ஒன்று என்று நினைத்தால் உதர சம்பந்தமான ரோகம் வரும் என்று இருப்பதாக சொல்கிறார்கள். இதை ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படிப் புரிந்துகொள்வது? நம் பெரியவர்களில் இவ்வார்த்தைக்கு என்ன சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்?

நாம் எல்லா க்ரந்தங்களையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நம் பூர்வாசார்யர்கள் எந்த க்ரந்தங்களை ப்ரமாணமாகச் சொல்லியிருக்கிறார்களோ அதைப் பார்க்கவேண்டும். மனுஸ்ம்ருதி போன்ற பொதுவான, உயர்ந்ததான க்ரந்தங்களைத்தான் பார்க்கவேண்டும். மற்றவையெல்லாம் சிவ பக்தர்கள், சைவர்களுக்காகச் சொன்னவை. அதை நாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
மேலும், எம்பெருமானையும் சிவனையும் ஒன்றாக நினைத்தல் கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். நாமும் அவ்வாறு நினைக்கவில்லையே. எம்பெருமான் மேம்பட்டவன். ஒன்றாக நினைப்பது தவறு என்ற விஷயம் சரிதான். யார் பெரியவர் என்பதற்கு ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம், மனுஸ்ம்ருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி போன்றவைகளை அருளிய மஹாமஹா மஹரிஷிகளின் க்ரந்தங்களைத்தான் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்றைவையெல்லாம் அந்தந்த பக்தர்களுக்காகச் சொன்னவை. அவை பொதுவாகவோ, நமக்காகவோ சொன்னவையல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top