அகத்து பெருமாளுக்கோ கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கோ கண்டருளப்பண்ணிய தேங்காயைத் தளிகைக்கு உபயோகிக்கலாமா? அந்தத் தளிகையை எம்பெருமானுக்கு அமுது செய்விக்கலாமா?

பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணிய தேங்காயை, தளிகைக்கு உபயோகிக்கலாம். அந்தத் தளிகையை பெருமாளுக்கு அமுது செய்விக்கலாம் என்பதாக சிலர் பண்ணுவதுண்டு. பெரியவர்கள் பண்ணுவதுண்டு.
அதேசமயம் அந்தத் தேங்காயைத் துருவி பெருமாளுக்கு அமுது செய்வித்து நாம் சாப்பிட்டுவிட்டோமேயானால், அதன் மீதி தேங்காயை மறுநாள் உபயோகித்தால் அந்தத் தளிகையை அமுது செய்விக்கக்கூடாது.
குறிப்புகள்:
பொதுவாக தேங்காய் சேர்க்காமல் ஒன்று சேர்த்து ஒன்று எனத் தனித்தனியாக எடுத்துவைத்து விடுவார்கள். தேங்காய் சேர்க்காமல் பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்துவிடுவார்கள். இது ஒரு ஸுக்ஷ்மம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top