பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கும் (ஸமாஶ்ரயணத்திற்கும்) கயா ஶ்ராத்தத்திற்கும் சம்பந்தமில்லை. ஆயினும் கயாஶ்ராத்தம் ஸாவகாச ஶ்ராத்தம். நமக்கு விருப்பமான சமயத்தில் செய்யலாம். ஸமாஶ்ரயணம் உபநயநத்திற்குப் பின் காலதாமதம் செய்யாமல் முடிந்தவரை சீக்கிரமாகவே செய்ய வேண்டியது. ஆகையால் ஸமாஶ்ரயணத்திற்குப் பின் செய்வது உசிதம்.
கயா ஶ்ராத்தத்தில் பிண்டதானம் முக்கியம். நம் ஸம்ப்ரதாயத்தில் பார்வண ஶ்ராத்தத்திலே பிண்டதானம் செய்யப்படுகிறது. க்ருஹஸ்தன் பார்வண ஶ்ராத்தத்தை தன் அக்னியில் செய்ய வேண்டும். ஆகையால் ஔபாஸனம் செய்யவேண்டி இருப்பதால் விவாஹமானவர் தம்பதியாக செல்வதே உசிதம்.