நவராத்திரியில் கலசம் வைப்பது, மரப்பாச்சி பொம்மை வைப்பது என்பது சில க்ருஹங்களில் வழக்கமிருக்கிறது. சில க்ருஹங்களில் அவை வைக்காமலே கொலு வைக்கும் வழக்கமுண்டு. இதுதான் ஸம்ப்ரதாயம் என்று இதில் கிடையாது. அவை வைப்பதும், எது முதலில் வைக்கவேண்டும் என்பதும் அவரவர்கள் க்ருஹ வழக்கப்படி பின்பற்றவும்.
பொம்மை வைப்பது என்பதில் முதலில் சுமங்கலி ஸ்த்ரீகள் அல்லது கன்யா பெண்கள் பொம்மை வைப்பதுதான் வழக்கம். யாரும் க்ருஹத்தில் இல்லையென்றால் கொலு வைத்துவிட்டு வெற்றிலை பாக்கு கொடுப்பதற்கும் வாய்ப்பிருக்காது. சுமங்கலியோ கன்யா பெண்ணோ அகத்தில் இல்லையென்றால் அந்த அகத்து புருஷ குழந்தைகளை முதல் பொம்மை வைக்கச்சொல்லலாம் அப்படி இல்லையென்றால் பக்கத்தில் யாரேனும் கன்யா பெண்கள் இருந்தால் அவர்களைக் கொண்டும் பொம்மை வைக்கச் சொல்லலாம்.