வெளி நாட்டுக்குச் செல்லும் பொழுது அங்கே நமக்கு ஏற்ற ஆஹாரம் கிடைக்காது என்று தெரியும் பொழுது முடிந்த வரையில் தானே செய்து சாப்பிட்டால் உசிதம். ஸ்வயம்பாகமாக தானே தளிகை செய்து சாப்பிட்டால் தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்க்கலாம். அதற்கு வசதி இல்லையென்றால் சில பதார்த்தங்கள் வெங்காயம் பூண்டு இல்லாமல் கிடைக்கின்றது என்று தெரிகிறது, அதை எல்லாம் பார்த்து, எந்த உணவாக இருந்தாலும் அதில் எல்லாம் எழுதி இருக்கும், அதைப் பார்த்து இதெல்லாம் இல்லாதவைகளாக வாங்கி அதை மட்டும் உட்கொண்டு தரிப்பதற்கு முயற்சிக்கலாம். தானே செய்து சாப்பிட்டால் எங்கேயாக இருந்தாலும் உசத்தி. அப்பொழுதுதான் நம்மால் ஆஹாரநியமத்தில் எப்படி இருக்கோ அதன்படி கடைபிடிக்க முடியும்.