அடியேன் தெலுங்கு ப்ராஹ்மணர் ஆவேன். பகவத் இராமானுஜாசார்ய சம்ப்ரதாயத்தில் சமீபத்தில்தான் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். அடியேன் ஸ்ரீவைஷ்ணவனாக வாழ ஆசைப்படுகிறேன். ஸ்ரீவைஷ்ணவ அஹாரநியமம்படி இயன்றளவு கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும்படி உள்ளது. அங்கு சைவ உணவு கிடைக்கும் ஆனால் நிஷித்தமான வஸ்துக்களான வெங்காயம் பூண்டு போன்ற வஸ்துக்கள் இல்லாமல் உணவு கிடைக்குமா என்று தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் என்ன செய்யவேண்டும்? வழிகாட்டவும்.

வெளி நாட்டுக்குச் செல்லும் பொழுது அங்கே நமக்கு ஏற்ற ஆஹாரம் கிடைக்காது என்று தெரியும் பொழுது முடிந்த வரையில் தானே செய்து சாப்பிட்டால் உசிதம். ஸ்வயம்பாகமாக தானே தளிகை செய்து சாப்பிட்டால் தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்க்கலாம். அதற்கு வசதி இல்லையென்றால் சில பதார்த்தங்கள் வெங்காயம் பூண்டு இல்லாமல் கிடைக்கின்றது என்று தெரிகிறது, அதை எல்லாம் பார்த்து, எந்த உணவாக இருந்தாலும் அதில் எல்லாம் எழுதி இருக்கும், அதைப் பார்த்து இதெல்லாம் இல்லாதவைகளாக வாங்கி அதை மட்டும் உட்கொண்டு தரிப்பதற்கு முயற்சிக்கலாம். தானே செய்து சாப்பிட்டால் எங்கேயாக இருந்தாலும் உசத்தி. அப்பொழுதுதான் நம்மால் ஆஹாரநியமத்தில் எப்படி இருக்கோ அதன்படி கடைபிடிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top