ஆசார்யன் பரமபதித்தால் அந்தச் சிஷ்யனுக்கு, ஆசார்யன் ஶரீர பந்துவாக இருந்தால் அந்த ஶரீர பாந்துவத்திற்கு என்ன தீட்டோ அந்தத் தீட்டு காத்தல் வேண்டும்.
ஶரீர பந்துவாக இல்லாவிட்டாலும் ஆசார்யன் க்ருஹஸ்தராக இருந்தால், சிஷ்யனுக்கு ஒரு நாள் தீட்டுகாத்தல் என்பது வழக்கமாக இருக்கு.
ஆசார்யன் ஒரு யதியாக இருந்தால் அதாவது சன்யஸ்தராக இருந்தால், அப்போது சிஷ்யனுக்கு எவ்வித தீட்டும் கிடையாது.