புருஷர்கள் அன்றைய தினம் ஸ்நானம் மற்றும் ப்ராத: சந்தியா பண்ணும்வரை விழுப்பா (தீட்டு) ?

ஆமாம் ஸ்நானம் பண்ணும்வரை விழுப்புதான். ஸ்நானம் பண்ணியவுடன் விழுப்பு போய்விடுகிறது. விழுப்பு போவதென்பதற்கு ப்ராத: சந்தியா வரை கணக்கில்லை. ஸ்நானம்தான் கணக்கு.
குறிப்புகள்:
விழுப்பு என்பதற்கும், தீட்டு என்பதற்கும் சிறிது வித்யாசம் உண்டு.
விழுப்பு என்றால் நாம் யார் மேலேயும் படாமல், எந்தத் தீட்டும் படாமல் தூங்கியெழுந்தவுடனே அந்த வஸ்த்ரத்தை நாம் களைந்துவிட வேண்டும். முதல்நாள் அணிந்த வஸ்த்ரத்திற்கு விழுப்பு என்று பெயர்.
தீட்டு என்பது விழுப்பைக் காட்டிலும் அதிகபடியானது. எங்கேயாவது மேலே பட்டுவிட்டது என்பதுபோல் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top