10 நாள் பங்காளியின் இறப்புத் தீட்டு காக்கும் சமயம் நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் தரிக்கலாம். ஆனால் ஸ்ரீசூர்ணத்தில் ப்ரதிஷ்டை ஆகாத ஸ்ரீசூர்ணத்தை அதாவது கடையில் வாங்கின ஸ்ரீசூர்ணத்தைதான் தரிக்க வேண்டும். ஸ்ரீ சூர்ண ப்ரதிஷ்டை என்று ஒன்று பண்ணுவார்கள் அந்த ப்ரதிஷ்டையான ஸ்ரீசூர்ணத்தைத் தீட்டுச் சமயத்தில் தரிக்கக்கூடாது.
சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் கட்டாயம் செய்யவேண்டும். அங்கந்யாஸம், கரந்யாஸம் இல்லாமல் செய்யவேண்டும்.
தீட்டு என்றாலே அசுத்தி என்று அர்த்தம். சுத்தமில்லை என்று அர்த்தமாகும். பெருமாள் உள்பாத்திரங்கள் எப்போதுமே சுத்தமாக இருத்தல்வேண்டும். அதில் அசுத்தி கலக்கக்கூடாது. கை அலம்பாமல் எடுத்தல் என்று பலவிதத்தில் அசுத்தி அதில் கலக்கக்கூடும். தீட்டுக்கு ஆஶௌசம் என்றுதான் ஸமஸ்க்ருதத்தில் பெயர். அந்தச் சமயத்தில் நாமே ஆஶௌசமாக இருக்கின்றபடியால் அப்பாத்திரங்களைத் தொட்டால் அதற்கும் அசுத்தி ஏற்பட்டுவிடும் என்கிறபடியாலே அதைத் தொடக்கூடாது.