கயா ஶ்ராத்தம் செய்தபிறகு அக்ஷய வடத்தில் கொத்தவரங்காயை விட்ட பிறகு அந்தக் காயை மடத்திலோ ஆஸ்ரமத்திலோ வழங்கும் கதம்ப ப்ரசாரத்தில் கலந்திருக்கும் பக்ஷத்தில் அந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா ? தெரியாமல் ஸ்வீகரித்து விட்டால் என்ன செய்வது?தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

கொத்தவரங்காயைப் புளியோடு சேர்க்கக்கூடாது என்றிருப்பதால் கதம்பத்தில் சேர்க்கமாட்டார்கள். ஆகையால் கேள்வியின் முதல் பகுதி ப்ரஸக்தியில்லை. பகவத் ப்ரசாதமாக இருந்து அதில் வேறு ஏதாவது விட்டகாய் வந்தால் அதை எடுத்துவைத்துவிட்டு சாப்பிடலாம். அங்கே அந்த வஸ்துகலந்ததைச் சாப்பிடாமல் கூட இருக்கலாம் அது அவரவர் மனதைப் பொருத்தது. தெரியாமல் சாப்பிட்டால் ப்ராயஶ்சித்தம் க்ருஷ்ணானுஸ்மரணமே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top