இரண்டு வருடத்திற்கு முன்பு பரஸமர்ப்பணம் செய்துகொண்டேன். ஆனால் இன்றுவரை என்னால் தெரிந்தோ தெரியாமலோ நிஷித்தமான வஸ்துக்கள் உண்பது, சந்தியாவந்தனம் முதலிய நித்யகர்மாக்கள் செய்யாமல் இருத்தல் என்று பாபங்கள் செய்கிறேன். இதனால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் இருக்கிறதா?

பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு நிஷித்தமான வஸ்து என்று தெரிந்தபின் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நியாயம். அதேமாதிரி சந்தியாவந்தனத்தைத் தெரியாமல் விடுவதென்பது இல்லை. தெரிந்தேதான் விடுகிறோம். இப்படிப்பட்ட தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும், அவைகளை மீண்டும் செய்யாமல் இருத்தல்வேண்டும். செய்த தவறுக்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ளலாம். இவை மோக்ஷத்திற்குத் தடையாக இருக்காது.
நாம் தெரிந்தே செய்யும் பாபங்களுக்கு ப்ராயஶ்சித்தம் புன: ப்ரபதனம். ஒருவேளை ப்ராயஶ்சித்தம் செய்யாமல் போனால் பகவானே லகு சிக்ஷை (தண்டனை) கொடுத்து மோக்ஷம் தருவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top