பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு நிஷித்தமான வஸ்து என்று தெரிந்தபின் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நியாயம். அதேமாதிரி சந்தியாவந்தனத்தைத் தெரியாமல் விடுவதென்பது இல்லை. தெரிந்தேதான் விடுகிறோம். இப்படிப்பட்ட தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும், அவைகளை மீண்டும் செய்யாமல் இருத்தல்வேண்டும். செய்த தவறுக்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ளலாம். இவை மோக்ஷத்திற்குத் தடையாக இருக்காது.
நாம் தெரிந்தே செய்யும் பாபங்களுக்கு ப்ராயஶ்சித்தம் புன: ப்ரபதனம். ஒருவேளை ப்ராயஶ்சித்தம் செய்யாமல் போனால் பகவானே லகு சிக்ஷை (தண்டனை) கொடுத்து மோக்ஷம் தருவான்.