ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும். ஆனால் ஒரு லௌகீக பலனுக்காக செய்து பலனில்லாமல் போயிற்று என்றால், செய்த அங்கங்களில் குறைவு இருந்திருக்கலாம். மேலும் பெருமாள் நமக்கு எப்போதும் ஹிதத்தைதான் செய்வான். நாம் எதோ ஒன்று எண்ணிக்கொண்டு செய்திருக்கலாம்.ஆனால் அது நமக்கு ஹிதமில்லை என்றால் அதை செய்யாமலே இருப்பான்.
ஆகையால் செய்த ஶரணாகதி பலிக்கவில்லை என்றால், அது நமக்கு ஹிதமில்லை என்பதால் பகவான் நமக்கு தரவில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும்.