ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும்.எந்தப் பலனுக்காகவும் ஶரணாகதி பண்ணலாம்.இப்படி இருக்க ஒரு லௌகீக பலனுக்காக ஒரு ஆகிஞ்சன்யனால் மஹா விஶ்வாஸத்தோடு செய்யப்பட்ட ஶரணாகதி பலிக்காமல் போவதற்கு அவரவர் கர்மாதான் காரணமா? தெளிவிக்க பிரார்த்திக்கிறேன்.

ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும். ஆனால் ஒரு லௌகீக பலனுக்காக செய்து பலனில்லாமல் போயிற்று என்றால், செய்த அங்கங்களில் குறைவு இருந்திருக்கலாம். மேலும் பெருமாள் நமக்கு எப்போதும் ஹிதத்தைதான் செய்வான். நாம் எதோ ஒன்று எண்ணிக்கொண்டு செய்திருக்கலாம்.ஆனால் அது நமக்கு ஹிதமில்லை என்றால் அதை செய்யாமலே இருப்பான்.
ஆகையால் செய்த ஶரணாகதி பலிக்கவில்லை என்றால், அது நமக்கு ஹிதமில்லை என்பதால் பகவான் நமக்கு தரவில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top