பொதுவாக தீட்டுக்காலத்தில் போடுவதில்லை. சிலர் 40 நாட்களோ அல்லது முதல் மாஸ்யம் வரையோ அல்லது 6 மாத காலம் வரை கோலம்போடாமல் இருப்பது என்பதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பண்டிகைகள் பொருத்தவரை பெருமாளுக்குச் செய்யவேண்டிய சில கார்யங்கள் சில பண்டிகைகள் இருக்கின்றன. அவையெல்லாம் அவசியம் கொண்டாட வேண்டியது. உ.தா: ஸ்ரீஜயந்தி வந்தால் பெருமாள் திருவாராதனம் நிற்காது. பெருமாளுக்காக ஏதோ ஓரிரண்டு பக்ஷணங்கள் செய்து அம்சை பண்ணலாம். திருக்கார்த்திகையன்று பெருமாளுக்கு விளக்கேற்றுவது நிற்காது. மகரசங்க்ரமண தர்ப்பணம் பண்ணுபவர்கள் தர்ப்பணம் செய்துதான் ஆகவேண்டும். ஆகையால் பெரியளவில் கொண்டாடாமல் சிறியளவில் கொண்டாடலாம்.
அதேபோல் கோலம் போடுவதும் ஒருவருடம்வரை போடாமல் இருத்தல் என்பது அவரவர் மனதைப் பொருத்தது. சிலர் நல்லநாள் தீட்டு காலத்திற்குப் பிறகு பார்த்து ஆரம்பித்து விடுவார்கள். துக்கத்தை அனுசரிப்பதென்பது அந்தப் போன வ்யக்திக்கும் அவர்களுக்கும் உள்ள அந்யோந்யத்தைப் பொருத்தது.