க்ருஹப்ரவேசம் பண்ணுவதில் ப்ரதானமே ஸ்த்ரீகளுக்குதான், அவர்களுக்கு அனுகூலமாகத்தான் நாள் பார்க்கனும். ஒரு க்ருஹத்தினுடைய முக்கியமான அதிபத்னி(தி) என்ற நிலையில் இருப்பவள் ஸ்த்ரீதான். அவள் கர்பகாலத்தில் இருக்கிறப்படியால் பெரியளவில் அலைச்சல் வேண்டாம் என்ற ரீதியிலும், மேலும் அவளும் வ்ரதகாலத்தில் இருக்கின்றபடியாலும் அந்தச் சமயத்தில் வீடுமாறக்கூடாது என்று வைத்திருக்கிறார்கள்.