வைர நகை அணிவது பற்றி ஶாஸ்த்ரம் என்ன சொல்லுகிறது? ஒருவர் கட்டாயம் வைரக்கல் நகை அணியவேண்டுமா அல்லது அது வேறும் ஆடம்பர ஆணிகலனாகுமா?

தங்கம் அணிவது எப்படி விசேஷமோ அதேபோல் வைரம் அணிவதும் விசேஷம்தான். அதனால் நம் உடம்பிற்கு சில க்ஷேமங்களெல்லாம் வரலாம். கட்டாயம் வைரநகை அணிந்துதான் ஆகவேண்டும் என்றெல்லாம் கிடையாது.
உ.தா சில புருஷர்கள் வைரக்கல் கடுக்கன் போட்டுக்கொள்வார்கள். அதை ஆடம்பரம் என்று சொல்லமுடியாது, ஆடம்பரமில்லாமலும் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வைரத்தை மட்டும் நன்கு விசாரித்து செய்யணும். சில வைரத்திற்குச் சில தோஷங்கள் என்றெல்லாமுண்டு. அந்த வைரம் அவரை பாதிக்கும், அவர் குடும்பத்தை பாதிக்கும் என்றெல்லாமுண்டு. அதனால் இதைப்பற்றி நன்றாகத் தெரிந்தவர்களிடம் அந்த வைரக்கல்லுக்குத் தோஷம் இருக்கா இல்லையா என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை அணியவேண்டும்.
கட்டாயம் வைரக்கல் இருக்கவேண்டும் என்றில்லை. ஆனால் சுபமான ரீதியில் ஸ்த்ரீகள், புருஷர்கள் வைரத்தில் போட்டுக்கொள்வார்கள், அது நல்லது. ஆடம்பரமாக நம்மவர்கள் யாரும் போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top