இதைப்பற்றி பலவிதமான அபிப்ராயமுண்டு. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான ஆசாரம், அதாவது ஸ்ரீரங்கத்தில் ஒருவிதமாக, காஞ்சியில் ஒருவிதமாக என்று பலவித ஆசாரம் இருக்கிறது. சிலபேர் ஒற்றைப்படை நாளில் (1,5,7..) துக்கம் விசாரிக்கவேண்டும் என்கிறார்கள். சிலர் இரட்டைப்படை நாள் என்றும், வேறு சிலர் 10 நாட்களுக்குள் எந்த நாளானாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள். நிறையபேர் திங்கட்கிழமை விசாரிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் பொதுவாகவே திங்கட்கிழமை விசாரிப்பதைத் தவிர்ப்பார்கள்.
திங்கள் தவிர மற்ற எந்த நாளானாலும் பரவாயில்லை என்பது பொதுவாக நிறையபேரிடம் இருக்கும் கருத்து. அந்தந்தத் தேசத்தில் என்ன ஆசாரமோ அதன்படி செய்யவேண்டியது.