பொதுவாக தீக்ஷா காலங்களில் சில நியமங்கள் சொல்லப்பட்டுள்ளது. தீக்ஷா என்பது ஒரு வ்ரதகாலம் போல். பலவிதமான தீக்ஷைகள் உண்டு, பல காலங்களில் தீக்ஷை சொல்லப்பட்டுள்ளது, உ.தா யாகதீக்ஷா, உபநயனம் சமயம், விவாஹத்திற்கு என்று தீக்ஷைகள் உண்டு. அந்தத் தீக்ஷா காலத்தில் அவர்கள் வபனம் செய்துகொள்ளக் கூடாது என்றிருக்கிறது.
அந்த ரீதியில் மனைவி கர்பமாக இருக்கும்போது அவளின் பர்தாவிற்கு தீக்ஷா காலம் சொல்லியிருக்கிறது. அதாவது, அவர் வ்ரதத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். பொதுவாகவே வ்ரததினங்களில் வபனம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றிருக்கிறது. இது வ்ரதகாலமானபடியாலே வபனம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்பதாகும்.