சாந்தி மூஹூர்த்தம் என்று சொல்வதுதான் கர்பாதான ஸம்ஸ்காரம். அது ஒரு குடும்பத்தினுடைய அபிவ்ருத்தி அதாவது அடுத்த சந்ததி வரவேண்டும் என்பதற்காக சில மந்திரங்களைச் சொல்லி செய்யக்கூடிய ஒரு சாந்திமூஹூர்த்தமாக இருக்கின்றபடியால் கர்ப ஆதான ஸம்ஸ்காரம், அதாவது கர்பத்தை உண்டாக்குதல் என்ற ரீதியில் கர்பாதான ஸம்ஸ்காரம் என்பதாகப் பெயர். அது நம் குடும்பத்தினுடைய க்ஷேமத்திற்கும், அபிவ்ருத்திக்கும், சகலவிதத்திற்கும் மங்கலங்களுக்கும் அது காரணமாக இருக்கின்றபடியால் விசேஷமாகச் சொல்லியிருக்கிறார்கள்.