Q1. ஸ்ரீவைஷ்ணவர் என்றால் விஷ்ணு பக்தர் என்று அர்த்தம். பகவானுடைய திருவுள்ளம் உகக்கும்படியாக நடந்தால் அவருக்கு ஸ்ரீவைஷ்ணவத்தில் பூர்த்தி இருக்கு அன்று அர்த்தம். அப்படியில்லையென்றால் பூர்த்தி இல்லாமல் அவரும் வைஷ்ணவர் என்கின்ற ரீதியில் நிறைவான ஒரு வைஷ்ணவராக ஆகமுடியாது என்கின்ற நிலை வரும்.
பூண்டு வெங்காயம் சாப்பிடுவதில் வைஷ்ணவர், ஸ்மார்த்தர் என்றெல்லாம் கிடையாது. அது ஒரு ஸாத்வீகமான ஆகாரம் கிடையாது. பகவான் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், என்னுடைய பக்தனாக இருக்கின்றவன் ஶாஸ்த்ரத்தில் என்னுடைய அபிப்ராயமாக என்னென்ன இருக்கின்றதோ அதை மதித்து நடக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அந்த ரீதியில் இதைச் சாப்பிடக் கூடாது என்றிருக்கிறது. அதனால் அதைச் சாப்பிடாமல் இருந்தால் வைஷ்ணவத்வம் பூர்த்தியாக இருக்கும் . இல்லாவிட்டால் அது நிறைவு பெறாமல் இருக்கும்.
குடும்பச்சூழல் காரணமாய் சாப்பிட நேர்ந்தாலும் அது பாபமாகும். ஏனென்றால் அதைச் சாப்பிடக்கூடாது என்று ஶாஸ்த்ரம் சொல்லி இருக்கிறது. அதனால் அது பாபமாகும். அது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொதுவானது.
——
Q2. ஸ்ரீவைஷ்ணவர் துளசிமாலையை தரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. துளசி மாலையில் பலவகை உண்டு. ப்ரதிஷ்டை பண்ணாத துளசி மாலையை பெரியோர்கள் ரொம்ப தரிப்பதில்லை. சில ஸம்ப்ரதாயத்தில் தரித்திருக்கிறார்கள். நம் ஆழவார் ஆசார்ய ஸம்ப்ரதாயத்தில் ப்ரதிஷ்டை பண்ண துளசி மாலையை பலபேர் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். ப்ரதிஷ்டை பண்ணால் அதில் சில நியமனங்கள் எல்லாம் உண்டு. தீட்டு காலத்தில் தரிக்கக்கூடாது. பெரியோர்களிடம் கேட்டுக்கொண்டு தரிக்கலாம்.