நாம் துக்கத்தில் இருக்கிறோம் என்பதுதான் காரணம். நாம் துக்கத்தை அனுஷ்டானம் பண்ணவேண்டும். அந்த ரீதியில் கொண்டாட்டங்கள், உத்ஸவங்கள், நாலுபேர் சேர்ந்து இருக்கக்கூடிய இடங்கள், அங்கெல்லாம் சிலநாட்கள் போகக்கூடாது என்று சொல்வார்கள். அதில் சில சங்கடங்கள் இருக்கும். வெளியில் இருப்பவர்கள், புதிதாகப் பார்ப்பவர்கள் எல்லாம் விசாரிக்க நேரிடும். இதெல்லாம் கோவிலில் நடக்கலாம். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் கோவில்களுக்குப் போக வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

