ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி ஸ்த்ரீகள் நாராயணீயம் மற்றும் சங்க்ஷேப இராமாயணம் சேவிக்கலாமா?

நாராயணபட்டத்திரி பண்ண நாராயணீயம் என்று ஒரு ஸ்தோத்ரம் இருக்கின்றது. அந்த ஸ்தோத்ரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அது ஸ்தோத்ர பாடம் என்கின்ற ரீதியில் வரும்.
மஹாபாரதத்தில் நாராயணீயம் என்று ஒன்று இருக்கிறது அதுவும் மேலும் சங்க்ஷேப இராமாயணம் இவையெல்லாம் இதிஹாசங்களில் இருக்கின்றபடியினால், இதை ஸ்த்ரீகள் சேவிப்பது ப்ராசீனத்தில் வழக்கமில்லை. ஆனால் நவீனத்தில் இந்த வழக்கம் வந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top