க்ரஹண காலத்தில் நம் நக்ஷத்ரங்களுக்குத் தோஷம் என்று பரிகாரம் செய்யவேண்டி வந்தால் நம் ஸம்ப்ரதாயத்தில் பரிகாரம் என்பது அகத்தில் பெருமாள் நித்யம் ஏற்றும் விளக்கு பக்கத்தில் மற்றொரு விளக்கு ஏற்றி பெருமாளைச் சேவிப்பது என்று வைத்துள்ளோம். வேண்டுமென்றால் க்ரஹணம் முடிந்த பிறகு , இரவு நேரமாக இருந்தால் மறுநாள் கோவிலுக்குச் சென்று எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.