க்ரஹண காலங்களில் தர்ப்பணம் பண்ணுவதற்கு முன் ஆசமனம் பண்ணவேண்டும். அப்படிச் செய்வதால் தீர்த்தம் உட்கொண்டதுபோல் ஆகாது. மேலும் எந்தக் கர்மா செய்தாலும் அதற்கு முன்பும், அக்கர்மா செய்தபின்பும் ஆசமனம் பண்ணவேண்டும். இவையெல்லாம் தீர்த்தம் உட்கொண்டது என்ற கணக்கில் சேராது தோஷமும் ஆகாது. நன்றாக கர்மா செய்வதற்கு முன்னும் பின்னும் ஆசமனம் செய்யவேண்டும்.