1. திருவாராதனம் முடித்தபின் கொடுக்கப்படும் பெருமாள் தீர்த்தம் என்பது என்ன? ” A) அது தப்ரதிக்ரஹ பத்ரம் என்று ஒவ்வொரு ஆசனத்திலு(அதாவது அர்க்யம், பாத்யம்) நாம் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் ஸ்நானாசன தீர்த்தமா? திருமஞ்சன தீர்த்தமல்லாத ஸ்நானாசன தீர்த்தமா? அல்லது இரண்டும் கலந்த தீர்த்தமா? அப்படித் தரும் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்? B) பெருமாளுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை என்ன செய்யவேண்டும்? 2. எங்கள் அகத்தில் குழந்தைகள் பள்ளி/கல்லூரிக்குச் செய்வதால் தளிகை சீக்கிரம் பண்ணிவிடுவார்கள். அதனால் நாங்கள் திருவாராதனத்திற்கு என்று தனியாக அமுது தயார்செய்கிறோம். இப்படிப்பட்ட சமயங்களில் போஜ்யாசனத்திற்குத் தளிகை எப்ப்டி ஸமர்ப்பிப்பது என்று தெளிவிக்கவும்.

A. திருவாராதனத்திற்குப் பிறகு கொடுக்கப்படும் தீர்த்தம் ஸ்நானாசன தீர்த்தம்தான். அதாவது பெருமாளுக்குத் திருமஞ்சனம் கண்டருளிய தீர்த்தம்தான். அதில் அர்க்ய, பாத்ய என்று இதர தீர்த்தங்கள் கலந்திருந்தாலும் தவறில்லை. அந்தத் தீர்த்ததை என்ன செய்வது என்று கேட்டால் அதை ஸ்வீகரிக்க வேண்டியதுதான்.
B. பெருமாளுக்குப் பால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை நாம் ஸ்வீகரிக்கலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அது விசேஷமாகும்.
சீக்கிரமாக முதலில் குழந்தைகளுக்காகத் தளிகை செய்துவிட்டால் கூட, இரண்டாவது தளிகைக்கு ப்ரசாதம் மட்டும் செய்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணினாலும் தவறில்லை. ப்ரசாதத்துடன் தயிரும் சேர்த்து கண்டருளப்பண்ணலாம். அப்படிச் செய்வது பெரியவர்கள் ஆசாரத்திலும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top