A. திருவாராதனத்திற்குப் பிறகு கொடுக்கப்படும் தீர்த்தம் ஸ்நானாசன தீர்த்தம்தான். அதாவது பெருமாளுக்குத் திருமஞ்சனம் கண்டருளிய தீர்த்தம்தான். அதில் அர்க்ய, பாத்ய என்று இதர தீர்த்தங்கள் கலந்திருந்தாலும் தவறில்லை. அந்தத் தீர்த்ததை என்ன செய்வது என்று கேட்டால் அதை ஸ்வீகரிக்க வேண்டியதுதான்.
B. பெருமாளுக்குப் பால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை நாம் ஸ்வீகரிக்கலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அது விசேஷமாகும்.
சீக்கிரமாக முதலில் குழந்தைகளுக்காகத் தளிகை செய்துவிட்டால் கூட, இரண்டாவது தளிகைக்கு ப்ரசாதம் மட்டும் செய்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணினாலும் தவறில்லை. ப்ரசாதத்துடன் தயிரும் சேர்த்து கண்டருளப்பண்ணலாம். அப்படிச் செய்வது பெரியவர்கள் ஆசாரத்திலும் இருக்கிறது.