ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இரண்டும் வெவ்வேரிடத்தில் ஏற்பட்டால் இரண்டு ஆசார்யர்களையும் அவசியம் ஆசார்யனாக கொண்டாட வேண்டும். இது ஒரு ஸ்த்ரீக்கு நேர்ந்திருந்தால் அவள் எந்த அகத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு போயிருக்கிறாளோ அங்கு என்ன சம்ப்ரதாயத்தை பின்பற்றுகிறார்களோ அதையே அவளும் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஸ்த்ரீக்கு திருமணத்திற்கு முன்பு ஆபத் பரந்யாஸம் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம், அதற்குப் பின் அவளுக்கு வேறு ஒரு சம்பிரதாயத்தில் இருக்கின்ற குடும்பத்தில் திருமணம் ஆகிறது, அந்தக் குடும்பத்து ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம் ஆகிறது என்றால், அந்தக் குடும்பத்தில் அந்த சம்ப்ரதாயத்தில் எந்த மாதிரி ரீதிகள் பண்டிகைகள் இருக்கின்றதோ அப்படித்தான் கொண்டாட வேண்டும்.