அகங்களில் பெருமாள் சன்னதியில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தால் போதும். ஆசையாக இருந்தால் இன்னொரு விளக்கும் ஏற்றி வைக்கலாம் அதில் தப்பு ஒன்றும் கிடையாது. நித்தியம் ஏற்றும் விளக்கு எண்ணெய் குத்தி ஏற்றும் விளக்காகவும் விசேஷ காலங்களில் இன்னொரு நெய் விளக்கை ஏற்றுவதும் சில க்ருஹங்களில் வழக்கத்தில் உள்ளது.
முன்னோர்கள் படங்களைப் பெருமாள் சன்னதியில் வைப்பது என்பது சன்னதி பெரிய இடமாக இருந்தால், பெருமாள் படங்கள் எல்லாம் மாட்டியிருந்தால் அதற்குக் கீழ் இருக்கின்ற இடத்தில் இந்தப் படங்களை மாட்டலாம். முன்னோர்கள் படம் ஆசார்யர்கள் படம் இவையெல்லாம் பெருமாள் படங்களுக்குக் கீழே மாட்டலாம்.