1. கார்த்திகை மாதம் முழுவதுமே இரண்டு விளக்கேற்றி சாயங்காலம் வேளையில் வாசலில் வைக்கவேண்டுமா? 2. பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் நித்யம் ஏற்றும் இரண்டு விளக்குகளைத் தவிர கூடுதலாக விளக்கேற்ற வேண்டுமா? ஶாஸ்த்ரப்படி இது சரியா? அன்றைய தினம் தானே அண்ணாமலையார் தீபமும் வருகிறது? கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும் திருக்கார்த்திகை போல் நிறைய விளக்கேற்ற வேண்டுமா?

காத்திகை மாதம் முழுவதும் சாயங்கால வேளையில் இரண்டு விளக்கேற்றி வாசலில் வைப்பதென்பது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.
பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் பரணி தீபம் என்று கூறுவர். அன்றைய தினமும், பாஞ்சராத்ர தீபத்தின் அடுத்தநாளும் இரண்டுக்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றுவர். இவையெல்லாமே வழக்கத்தில் இருப்பதுதான் ஏற்றுவதால் தவறொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top