ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் ஒருவருக்குத் திருவாராதனம் செய்யும் தகுதி இல்லை என்று உள்ளது. இந்நிலையில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ளும்வரை, ஒருவர் எவ்வாறு தோஷம் இன்றி பெருமாளுக்கு ஆராதனம் செய்யலாம்?

பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் திருவாராதனம் செய்யக்கூடாது. பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்வரை பெருமாளுக்கு ஆராதனம் செய்யமுடியாது. பெருமாளுக்கு நிவேதனம் செய்யலாம். அதுவும் பஞ்சஸம்ஸ்காரம் பண்ணியிருந்தால்தான் செய்யமுடியும் ஏனென்றால் நிவேதனத்தில் வரும் மந்த்ரங்கள் திருவஷ்டாக்ஷர மந்த்ரம் வரும். அது பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் சமயம்தான் உபதேசமாகும். தோஷமில்லாமல் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வது என்பது பஞ்சஸம்ஸ்காரம் ஆகும்வரை சற்று கடினம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top