க்ருஹத்தில் சுதர்சன யந்த்ரத்தை வைத்துக்கொள்வது நல்லதுதான். அதை எந்த உலோகத்தில் செய்வது என்பதையும் எப்படிப் ப்ரதிஷ்டை செய்வது என்பதையும், சுதர்சன ஹோமம் செய்விப்பவர்கள், பெரியவர்களைக் கேட்டால் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
சக்கரத்தாழ்வரை ஜபிக்க இரண்டு மூன்று சுதர்சன மந்த்ரங்கள் இருக்கிறது. ஆசார்யனிடம் விண்ணப்பம் செய்து உபதேசம் பெற்றுக்கொள்ளவும்.
ஆம், சுதர்சன யந்த்ரம் ப்ரதிஷ்டையாகி இருந்தால் அதிகப்படியான நியமங்கள் கடைபிடிக்கவேண்டும். அந்த யந்த்ரத்தைத் தொடும்போது மிகவும் சுத்தியோடு தொடவேண்டும். அனாசாரங்கள் கலந்து அந்த யந்த்ரத்தைத் தொடக்கூடாது.