அடியேனின் க்ருஹத்திற்கு அருகில் உள்ள (குரோம்பேட்டை) கோவிலின் ப்ரஸாதம் பற்றிய கேள்வி. அடியேன் ஜிஎஸ்பிகேவில் உபன்யாசம், காலக்ஷேபங்கள் (குறிப்பாக ஸ்ரீவாசுதேவாசார் ஸ்வாமி) கேட்கும் வழக்கமுடையவன். அதனால் நிறைய பயன் பெற்றுள்ளேன். அடியேன் காலை மாலை இருவேளையும் கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவன். கோவிலில் மீதமுள்ள ப்ரஸாதங்களை (பெரும்பாலும் சாதத்தை) அந்தந்த தளிகை மற்றும் நைவேத்தியம் செய்த பாத்திரங்களிலேயே வைத்து கோவிலுக்கு வெளியே வைத்து விடுகிறார்கள். இதை அந்தப் பகுதியில் உள்ள மாடுகள் நேரடியாக அந்த பாத்திரத்தில் இருந்து எடுத்து உண்கின்றன. இது சரியான பழக்கமா? அந்தப் பகுதியில் உள்ள நாய்களும் சில சமயம் இந்த பாத்திரங்களைத் தீண்டுவதற்கும், அந்த ப்ரசாதங்களை உண்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இது சரியான செயலா அல்லது இதனால் அனாசாரம் ஏதும் ஏற்படுகிறதா? இதைப் பற்றி நான் ஏற்கனவே கோவிலில் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறியும் எந்தப் பயனும் இல்லை. இதனால் எனக்கு அந்த ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பம் நிலவுகிறது. கோவில் ப்ரசாதத்தை ஏற்றுக் கொண்டால் அது அனாச்சாரம் ஆயிற்றே என்ற பயமும், அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது பாபம் என்றும் அடியேனுக்குத் தோன்றுகிறது. தயவுசெய்து இந்த விஷயத்தில் ஸ்வாமிகளைக் கேட்டு அடியேனுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டுகிறேன்.

அந்தப் பாத்திரத்தை அப்படி வைப்பது சரியில்லைதான். குறிப்பாக நாய் தீண்டும்படி வைப்பது சரியில்லை. அவர்கள் அதை நல்ல ரீதியில் சுத்தம்செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கோயில் பாத்திரம் அல்லாது வேறு ஒரு பாத்திரத்திலோ, வாளியிலோ ப்ரசாத்தத்தைப் போடலாம் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top