1) திருவாராதனத்தின் போது பெருமாளுக்குச் சமர்ப்பிக்கும் திருத்துழாய் முழுவதையும் கோயிலாழ்வாரில்/பெருமாள் பெட்டியில் விடவேண்டுமா? அல்லது அவற்றில் சிலவற்றை நாமும் நமது குடும்பத்தினரும் ப்ரஸாதமாக ஸ்வீகரிக்கலாமா? 2) பழைய/கிழிந்த பெருமாள் வஸ்த்ரங்கள், கிழிந்த/உடைந்த பெருமாள் படங்கள்/பொம்மைகள், பெருமாள் படம் போட்ட நாள்காட்டிகள் இவற்றை எப்படி அப்புறப்படுத்துவது? எனக்கு இவற்றைக் குப்பையில் ஏறிய மனமில்லை. 3) அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களை எப்படி அப்புறப்படுத்துவது?

திருத்துழாய் முழுவதையும் கோவிலாழ்வாருக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் ப்ரசாதமாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அகத்தில் எல்லோருக்கும் கொடுக்கலாம்.
பெருமாள் வஸ்த்ரங்கள், படங்கள் போன்றவற்றைக் குப்பையில் போடாமல், கால்படாத உசிதமான இடத்தில் சேர்த்துவிடலாம்.
அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களைக் கால்படாத இடத்தில் மரத்தடியிலோ அல்லது புதரிலோ சேர்த்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top