திருத்துழாய் முழுவதையும் கோவிலாழ்வாருக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் ப்ரசாதமாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அகத்தில் எல்லோருக்கும் கொடுக்கலாம்.
பெருமாள் வஸ்த்ரங்கள், படங்கள் போன்றவற்றைக் குப்பையில் போடாமல், கால்படாத உசிதமான இடத்தில் சேர்த்துவிடலாம்.
அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களைக் கால்படாத இடத்தில் மரத்தடியிலோ அல்லது புதரிலோ சேர்த்துவிடலாம்.