1) பொதுவாக பெருமாள் மற்றும் தாயாரின் உற்சவ மூர்த்திகளின் கண்கள் ஏன் மூடியே உள்ளன? 2) பெருமாளின் உற்சவ மூர்த்திகளுக்கு (உதாரணம்: நம்பெருமாள், வரதர், சாரங்கபாணி, பார்த்தசாரதி) திருமண் அணிவிக்காமல் ஏன் திலகம் அணிவிக்கப்படுகிறது? 3) பெருமாள் மற்றும் தாயாரின் மூல மற்றும் உற்சவ மூர்த்திகளில் உள்ள திருச்சிவிகையில் பூதம் போன்ற ஒரு உருவம் உள்ளதே. இதன் பின்னே ஏதாவது காரணம் உள்ளதா?

அவர்களின் கண்களுக்கு நேத்ரோந்மீலநம் என்று ஒன்று பண்ணியிருப்பார்கள் அந்த ரீதியில் கண் திறந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். மூடின மாதிரி என்று இருந்தால் அவருக்கு அப்படி அமைப்பு என்று மாத்திரம்தான். முக்கால்வாசி நேத்ர உந்மீலநம்தான் கண் திறந்திருப்பதாகதான் அமைப்பிருக்கும்.
திருமண் என்பது பகவானின் தாஸன் நாம் என்பதற்கான அடையாளமாகும். அந்த ரீதியில் அவருக்கு அதை ஸமர்ப்பிக்கமுடியாது அவருக்குத் தாஸனாக அவரே ஆகமுடியாது. அதனால் அவருக்கு அலங்காரமாக திருமண் ஸாத்துப்படி பண்ணுகிறார்கள் என்பதுதான் அர்த்தமாகும்.
திருச்சிவிகையில் பூதம் இருப்பதாகப் பார்த்ததில்லை. பொதுவாகச் சிங்கத்தின் தலைதான் பார்த்ததுண்டு. சிம்மாஸனத்தில் பெருமாள் இருப்பதுபோலாகும். சிம்மம் என்பது ஶ்ரேஷ்டமானது என்பதையும் மிகவும் உயர்ந்தது என்பதையும் காட்டும் அடையாளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top