அடியேனுக்குச் சில ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் உண்டு. அவர்கள் விநாயகரை வழிபடுவது, விநாயக சதுர்த்தி கொண்டாடுவது என்று வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விநாயகரை விஷ்வக்ஸேனராக வழிபடுவதில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் கௌரிதனயனான விநாயகரை வழிபடுவது சரியா?

விநாயகர் விஷ்வக்ஸேனர் இல்லை. விஷ்வக்ஸேனரும் விநாயகரும் வேறு வேறுதான். விநாயகரை விஷ்வக்ஸேனராக யாரும் வழிபடுவதில்லை. விஷ்வக்ஸேனரின் பரிஜனங்களில் ஒருவருக்கு யானை முகம் உண்டு, அவருக்கு கஜானனன் என்று பெயர். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயக சதுர்த்தி கொண்டாடவேண்டிய அவசியமில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் விநாயகரை வழிபடுவது சரியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top