ஸ்ரீ. உ. வே. வாசுதேவாசார்யார் ஸ்வாமி கைசிக புராண படனம் ஸாதிக்கும்பொழுது, ராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் விபீஷணஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டது போல் நம்பாடுவான் ப்ரம்ஹராக்ஷஸ் ஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டார் என்று ஸாதித்தார். ஆனால் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் இந்த ஶரணாகதியைப் பற்றி குறிப்பிடவில்லையே? இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

அபயப்ரதான ஸாரத்தில் என்னென்ன ஶரணாகதி இருக்கிறதோ அதையெல்லாம் குறிப்பிடுவதாக ஒரு நிர்ணயம் ஸ்வாமி தேஶிகன் செய்துகொள்ளவில்லை. உதாஹரணத்திற்குச் சில ஶரணாகதியெல்லாம் சாதித்திருக்கிறார். அவர் குறிப்பிடாததால் அது இல்லை என்றாகிவிடாது.
பெருமாள் ஶரணாகதி ப்ரதானமாகக் காட்டிருக்கிறார். மேலும் இதிஹாஸங்களில் பூர்வர்கள் எடுத்திருக்கக்கூடிய ஶரணாகதியெல்லாம் காட்டிருக்கிறார்.
நம்பாடுவான் ப்ரம்மராக்ஷஸ் பற்றிய ஶரணாகதியும் உண்டு. இவையும் ஒன்று என்று சொன்னால் மற்றவை எல்லாம் ஒரு உபலக்ஷணமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top