ரஜஸ்வலை காலத்தில் பெண்கள் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கக் கூடாது. அது தவறு. அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. வேறு வழியே இல்லாமல் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதை லேசாக தணலில் காட்டி பின்பு முறைப்படி சாணியால் சுத்தி பண்ணி எடுத்துக் கொள்ளலாம். அதுவும் இரண்டாம் பக்ஷம் தான். ஆனால் எந்தக் காரணத்தினாலும் பெருமாளுக்குத் தளிகை பண்ணும் பாத்திரங்களுடன் அதைச் சேர்க்கவே கூடாது. அதனால் அதைக் காட்டிலும் அதை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது.