Quilt மெத்தையை ஜலத்தில் நனைத்துப் போட முடியுமா என்று தெரியவில்லை. நாம் படுத்துக் கொண்டு உடுத்திக்கொண்ட துணிகளையெல்லாம் நனைக்க வேண்டும் என்று இருக்கிறது. அதனால் நனைக்க முடியாத பக்ஷத்தில் அதை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
உங்களுக்கு முதுகு வலி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்காக ஒன்று செய்யலாம். ரஜஸ்வலை காலத்திற்கு மட்டும் ஒரு தனிப்பட்ட மெத்தையை வைத்துக் கொள்ளலாம். மற்ற சாதாரண நாட்களில் வேறு ஒன்று என்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்தச் சமயத்தில் அதை ப்ரோக்ஷணம் பண்ணி வைத்துக்கொண்டு மற்ற நாட்களில் அதை உபயோகப்படுத்தாமல் இருப்பது என்று செய்யலாம் என்று தோன்றுகிறது.