அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா என்றால் என்ன? ஏன் அந்த நாட்களில் நாம் தர்ப்பணம் செய்கிறோம்?

மாக மாசம், பௌர்ணமி திதிக்குப் பிறகு வரக்கூடிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி திதிக்கு அஷ்டகா என்று பெயர். அடுத்த நாள் அன்வஷ்டகா, அதாவது அஷ்டமியைத் தொடர்ந்து வரக்கூடியதால் அன்வஷ்டகா என்று பெயர்.
மாக மாசம் என்பது பித்ரு மாசமாகும். மக நக்ஷத்திரத்திற்கு, பித்ருகள்தான் தேவதை. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறபடியால் மாக மாசம் என்று பெயர். நம் கணக்குப்படி மாசி மாசம் என்று வரும். ஆக பித்ரு மாசம், அதில் வரும் அஷ்டமி திதியும் பித்ரு திதி ஆகையால் அது விசேஷமாகிறது. மேலும் ஏகாஷ்டக ஶ்ராத்தம் பண்ணவேண்டும் என்றும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ப்ரதிநிதியாகதான் நாம் தர்ப்பணம் பண்ணுகிறோம். பித்ருகளுக்கு விசேஷமாகும்.
அனு என்றால் தொடர்ந்து வரக்கூடியது என்பதாகும். அடுத்த நாள் அன்வஷ்டகா பண்ணவேண்டும் என்பதும் ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top